உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செஞ்சியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

செஞ்சியில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

செஞ்சி: செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

செஞ்சி பகுதி சிவன் கோவில்களில் நேற்று (செப்., 7ல்) பிரதோஷ வழிபாடு நடந்தது. செஞ்சி காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஏகாம்பரேஸ்வரர், காமாட்சியம் மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.

நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி நந்தீஸ்வரரை வழிபட்டனர்.

பீரங்கிமேடு அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அருணாச் சலேஸ்வரர், அபிதகுஜாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது தொடர்ந்து நந்திஸ் வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சுவாமி கோவில் உலாவந்தது.

முக்குணம் முக்குன்றநாத உடையார் கோவிலில் முக்குன்றநாதர், நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையை தொடர்ந்து சுவாமி கோவில் உலா வந்தது.

செஞ்சி கிருஷ்ணாபுரம் சுந்தரவிநாயகர் கோவில் ஈஸ்வரருக்கும், நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !