விழுப்புரம் விநாயகர் கோவில்களில் சதுர்த்தி சிறப்பு வழிபாடு
விழுப்புரம்: விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரத்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரம் கோவிந்தசாமி நகரில் அமைந்துள்ள ஸ்ரீ அமிர்த கணபதி கோவிலில் நேற்று காலை 8.00 மணிக்கு கணபதிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து 9.00 மணிக்கு தீபாராதனை, 10.00 மணிக்கு உற்சவர் வீதியுலா, மாலை 6.00 மணிக்கு அமிர்த கணபதி சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு 7.00 மணிக்கு 108 கணபதி ஹோமம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், தர்மகர்த்தா தயாளன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இதே போல், விழுப்புரம் ரயிலடி விநாயகர் கோவில், சித்திவிநாயகர் கோவில், அமராபதி விநாயகர், பூந்தோட்டம் செல்வ விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.