சென்னையின் விநாயகர் சிலை ஊர்வலம் போக்குவரத்து மாற்றம்
சென்னை:சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள், பட்டினப்பாக்கம், ஸ்ரீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு கொண்டு வரப்படும்.
இதையொட்டி, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலையில், பாதசாரிகள் நடமாட்டம் அதிக மாக இருக்கும். எனவே, விநாயகர் சிலை கரைக்கப்படும் நாட்களில், தேவைப்படும் பட்சத்தில், போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
அதன் விபரம்: ஈ.வே.ரா., சாலை, ஹாரிங்டன் சாலை, 100 அடி சாலை, ஆற்காடு சாலை, வள்ளூவர் கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, அண்ணா ரோட்டரி, கத்தீட்ரல் சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டி.ஜி.எஸ்., தினகரன் சாலை ஆகிய சாலைகள், மதியம், 12:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை போக்குவரத்து மிகுதியாக காணப்படும்.
அதற்கு ஏற்றவாறு, தங்கள் பயணத்தை வாகன ஓட்டிகள் திட்டமிட்டு கொள்ள வேண்டும்
வாலாஜா சாலை, பாரதி சாலை, பெசன்ட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, கச்சேரி சாலை, தெற்கு கெனால் பேங்க் சாலை வழியாக வரும் வாகனங்கள், காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி செல்லாமல் மாற்றுப்பாதையில் செல்லலாம்.
அடையாறிலிருந்து பாரிமுனை செல்லும் வாகன ஓட்டிகள், ராமகிருஷ்ணா மடம் சாலை வழியாக மந்தைவெளி, லஸ் கார்னர், ராயப்பேட்டை நெடுஞ்சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு, ஒயிட்ஸ் சாலை, ஸ்மித் ரோடு, அண்ணா சாலை வழியாக பாரிமுனை சென்றடையலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.