பழநி முருகன் மலைக்கோயிலில் புரட்டாசி வழிபாடு
ADDED :2576 days ago
பழநி: புரட்டாசி மாதபிறப்பை முன்னிட்டு, பழநி முருகன் மலைக்கோயிலில் சிறப்பு யாகபூஜை நடந்தது. பழநி மலைக் கோயிலில் புரட்டாசி மாதபிறப்பை முன்னிட்டு, ஆனந்த விநாயகருக்கு கும்பகலசங்கள் வைத்து, கணபதி ஹோமத்துடன், யாகபூஜை நடந்தது. விநாயகருக்கு புனித கலசநீரில் அபிஷேகம் செய்து, லட்டு படைக்கப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும் திருஆவினன்குடிகோயில், பெரியநாயகியம்மன் கோயில், லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், பெரியாவுடையார் உள்ளிட்ட கோயில்களில், பெருமாள், அம்மன், சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரத்தில், தீபாராதனை நடந்தது.