உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ. 43 லட்சம்

மேல்மலையனூர் கோவிலில் உண்டியல் வசூல் ரூ. 43 லட்சம்

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ரூ. 43 லட்சத்து 5 ஆயிரத்தி 861 உண்டியல் காணிக்கை கிடைத்தது. மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை முடிந்து, பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள்நேற்று திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளர்கள் பிரகாஷ், ஜோதி ஆகியோர் முன்னிலையில், கோவில் வளாகத்தில் பணம் எண்ணும் பணி நடந்தது.அதில், ரூ. 43 லட்சத்து 5 ஆயிரத்தி 861 பணம், 202 கிராம் தங்க நகைகள், 375 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தன. இதில் அறங்காவலர்கள் ஏழுமலை, ரமஷே், கணேசன், செல்வம், மணி, சரவணன், சேகர் ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !