பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :2698 days ago
பரமக்குடி:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி 27 ம் ஆண்டாக கலைமகள் விழாக்குழு சார்பில், பள்ளி சிறுமியர்களின் பரதநாட்டியநிகழ்ச்சி நடந்தது. இதே போல் நயினார்கோவில் நாகநாதசுவாமி கோயிலில் சொற்பொழிவு, பல்சுவை நிகழ்ச்சி, பட்டிமன்றம் நாட்டியம், இன்னிசைகச்சேரி எனநடக்கிறது. எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் சொற்பொழிவுநடந்தது. மேலும் பல்வேறு வீடுகளில் கொலு அமைக்கப்பட்டு தினமும்சிறப்பு நிகழ்ச்சிகள், பஜனை நடக்கிறது.