உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம்

கரூர்: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில், சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இக்கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 8ல் துவங்கியது. தொடர்ந்து, முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் (நவம்., 13ல்) மாலை, 5:30 மணிக்கு, நான்கு மாட வீதிகளிலும் சூரனை, முருக பெருமான் வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி விமரிசையாக நடந்தது.

நேற்று (நவம்., 14ல்) காலை கோவிலில், பசுபதீஸ்வரர், பூதேவி, ஸ்ரீதேவி திருக்கல்யாண உற்சவம் நடந் தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மஹா தீபாராதனைக்குப் பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !