உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாச்சி சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு

பொள்ளாச்சி சுப்ரமணியருக்கு திருக்கல்யாணம் ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு

பொள்ளாச்சி:பொள்ளச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம், திரு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி விரதம் பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது.

பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழா கடந்த, 8ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 14ம் தேதி வரை தினமும் நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடந்தது.கடந்த, 12ம் தேதி வேல் வாங்கும் உற்சவத்தை தொடர்ந்து, 13ம் தேதி நகர வீதிகளில் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடந்தது.

நேற்று முன்தினம் (நவம்., 14ல்)காலை மகா அபிஷேகம், இரவு சுப்ரமணியர், வள்ளி, தெய் வானை திருக்கல்யாணமும் நடந்தது. நேற்று (நவம்., 15ல்) மாலை, திரு ஊஞ்சல் உற்சவத் துடன் கந்த சஷ்டி விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !