பிதுர் தோஷ பரிகாரம்
ADDED :5018 days ago
நம் குடும்பத்தில் மறைந்த முன்னோருக்கு தர்ப்பணம் செய்யாமல் போனால், பிதுர் தோஷம் ஏற்படும். இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சி குறையும். நன்மைகள் தடைபடும். சிலருக்கு கனவிலும் வந்து ஏதாவது தேவைகளைக் கேட்கக்கூடும். சிலர் வயதான காலத்தில் பெற்றோரைச் சரிவர கவனிக்காமல் விட்டு, அவர்களின் இறப்புக்கு பின் பிதுர் சாபத்திற்கு ஆளாவதும் உண்டு. இந்த தோஷம் நீங்க அமாவாசை விரதம் இருந்து, பசுமாட்டிற்கு புல்,கீரை,பழம் கொடுத்து வழிபட வேண்டும். காலையில் நீராடி, பசுவை மும்முறை வலம் வந்து, வணங்கவேண்டும். வசதியிருப்பவர்கள் சமுத்திரக்கரையில் நீராடி, ஏழை அந்தணருக்கு பசுவும் கன்றும் தானம் கொடுக்கலாம்.