உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழா

மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழா

விழுப்புரம்:மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அமாவாசை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது;கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். பி.டி.ஓ., அலுவலகம் மூலம் தற்காலிக பஸ் நிறுத்தம், தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்த வேண்டும்.

போக்குவரத்துத் துறை மூலம் சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும்.முழு சுகாதார திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கழிவறை, குளியலறை ஏற்படுத்த வேண்டும்.
மின்வாரியம் மூலம் விழா நாட்களில் ஏற்படும் மின் தடைகளை சரி செய்யவும், விழாக்காலங்களில் மும்முனை இணைப்பு மின்சாரம் வழங்க வேண்டும்.

இந்து சமய அறநிலையத்துறை மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலையங்களில் சி.சி.டி.வி., மூலம் கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்துறை மருத்துவக்குழு மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !