வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. மேல்மலையனுார் அடுத்த வடவெட்டி ரங்கநாதபுரத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதை முன்னிட்டு காலை விநாயகர், பெரியாழி, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். மாலை 6:00 மணிக்கு உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 10:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அங்காளம்மனுக்கு ஊஞ்சள் தாலாட்டு, மகா தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.
அவலுார்பேட்டை: மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அவலுார்பேட்டை கடைவீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. இரவு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.