சிதம்பரம் தில்லைக்காளியம்மனுக்கு அமாவாசை அர்த்தஜாம பூஜை
ADDED :2500 days ago
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவிலில் நடந்த அமாவாசை அர்த்தஜாம பூஜை நடந்தது.சிதம்பரம் தில்லைக்காளி அம்மன் கோவிலில் அமாவாசை அர்த்தஜாம அபிஷேக மண்டலி சார்பில் மார்கழி மாத அமாவாசையையொட்டி சிறப்பு அர்த்தஜாம பூஜை, மகா அபிஷேகம், விநாயகர் மற்றும் பிரம்மசாமுண்டி அம்மனுக்கு நெய் தீபம் வழிப்பாடும், தில்லைக்காளி அம்மனுக்கு குடம் நல்லெண்ணெய் அபிஷேக தைலக்காப்பு, பால், தயிர், மற்றும் குளிர்ச்சியான பொருள்கள், பழம், வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது.
தில்லைக்காளியம்மனுக்கு வெண்பட்டு சாற்றி, வெட்டிவேர், விளாமுச்சி வேர், செவ்வரளி பூ சிறப்பு அலங்காரத்தில் சிறப்பு அர்த்தஜாம பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.