பழநி தைப்பூச விழா நிறைவு: பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :2574 days ago
பழநி, பழநி தைப்பூசவிழாவை முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயில் தேரடி தெப்பக்குளத்தில் இன்று (ஜன.24) தெப்போற்ஸவம் நடக்கிறது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசவிழா ஜன.,15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜன.,20ல் திருக்கல்யாணம், நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.நேற்று மதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடங்கள், காவடிகள் எடுத்தும் ஆட்ட பாட்டத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு பெரிய தங்கமயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி ரதவீதியில் உலா வந்தார். கடைசிநாளான இன்று இரவு தெப்போற்ஸவம் நடக்கிறது. அதன்பின் கொடி இறக்குதலுடன் தைப்பூச விழா நிறைவடையும்.