பத்ரகாளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்
ADDED :2453 days ago
மேச்சேரி: மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபி ?ஷகம், 2013 ஜன., 23ல் நடந்தது. அதன் ஆறாம் ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நேற்று காலை, 109 வலம்புரி சங்காபி?ஷகம் நடந்தது. காலை, 11:00 மணிக்கு, சாம்ராஜ்பேட்டை ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்திலிருந்து, ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாகச் சென்றனர். மதியம், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அன்னதானம், அம்மன் திருவீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை, செயல் அலுவலர் ராஜா, பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்ற தலைவர் அம்மாசி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்தனர்.