பெரியகுளம் ஆதியோகியை தரிசித்த பக்தர்கள்
ADDED :2442 days ago
பெரியகுளம்:கோவை ஈஷா யோகா மையத்தில் மார்ச் 4ல் மகாசிவராத்திரி விழா நடக்க உள்ளது. பெரியகுளம் ஆன்மிக பக்தர்களை சிவராத்திரி பூஜையில் பங்கெடுப்பதற்காக, ஆதியோகி சிலை வாகனம் இங்குள்ள ஈஷா மையத்திற்கு வந்தது. ஆதியோகிக்கு பூஜைகள் செய்யப்பட்டது. பெரியகுளம் பகுதியில் வந்த ஆதியோகியை, வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்று தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் எழிலரசு, பக்தர்கள் செய்தனர்.