மூன்று நடராஜர்கள்!
ADDED :2632 days ago
தென்பாண்டிச் சீமையில் திருக்கானப்பேர் என்னும் காளையார் கோயில் வரகுண பாண்டியரால் உருவாக்கப்பட்டு, மருதுபாண்டியர்களால் வளர்ச்சி பெற்றது. இங்கே பிரசித்தி பெற்ற காளீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக் கோயிலுக்கு வலதுபுறம் சவுந்தரநாயகி சமேத சோமேஸ்வரர் கோயிலும், இடதுபுறம் மீனாட்சியம்மை சமேத சுந்தரேஸ்வரர் கோயிலும் உள்ளது. இடையில் சொர்ணவல்லி சமேத காளீஸ்வரர்
கோயில் உள்ளது. ஆக இந்த மூன்று திருக்கோயில்கள் உள்ளடக்கிய கட்டுமான அமைப்புக் கொண்டு அற்புதமாக விளங்குகிறது கோயில்!