உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உறையூர் குழுமாயி கோவில் குட்டிக்குடி விழா: குவிந்த பக்தர்கள்

உறையூர் குழுமாயி கோவில் குட்டிக்குடி விழா: குவிந்த பக்தர்கள்

திருச்சி: புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில், பிரசித்திப்பெற்ற, குட்டிக்குடி திருவிழாவில், பலி கொடுக்கப்பட்ட, நூற்றுக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை மருளாளி குடித்தார்.

திருச்சி உய்யக்கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆகிய, மூன்று ஆறுகள் சங்கமிக்கும், ஆறுகண் கலிங்கி அருகே, புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும், ‘குட்டிக்குடித்தல் திருவிழா பிரசித்திப்பெற்றது.

விழாவில் அம்மன் காளி ஓட்டமாக, தென்னை ஓலை, வெட்டிவேர் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், வீதியுலா வந்தார். உறையூர், புத்தூர், தென்னூர் பகுதியில் வீதி, வீதியாக உலா வந்த அம்மனுக்கு சுத்தபூஜை என்பதால், வீடுகள் தோறும், தேங்காய், பழம் வைத்து பூஜை செய்தனர். தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான, ‘குட்டிக்குடித்தல் வைபவம் நடைபெற்றது. இன்று (28ம் தேதி) காளி ஓட்டமாக வந்த அம்மனின் முன்னிலையில், தாரை, தப்பட்டை, உடுக்கு அடித்து மருளாளிக்கு அருள் வர வைத்தனர். மருளாளி அருள் வந்து, பலி கொடுத்த ஆடுகளின் ரத்தத்தை குடித்தார். நூற்றுக்கணக்கான ஆடுகளின் ரத்தத்தை, மருளாளி ஆவேசமாக குடிப்பது, காண்போரின் ரத்தத்தை உறைய வைத்தது. உறையூர், புத்தூர், தென்னூர் பகுதிகளில், ராட்டினம், சாலையோர கடைகள் என திருவிழா கோலம் பூண்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !