உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்

விருத்தகிரீஸ்வரர் கோவிலில் விடையாற்றி உற்சவம்

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு, பஞ்சமூர்த்திகள் காதம்பரி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசிமக பிரம்மோற்சவம் கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 18ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், 19ம் தேதி மாசிமகம், 20ம் தேதி தெப்பல் உற்சவத்துடன் நிறைவடைந்தது. அதைத் தொடர்ந்து, விடையாற்றி உற்சவம் நடக்கிறது. உற்சவத்தையொட்டி, விநாயகர், முருகர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு நூற்றுக்கால் மண்டபத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, சாத்துக்குடி, வாழை உள்ளிட்ட பழங்கள், கத்தரி, முள்ளங்கி, புடலை, கேரட், பச்சை மிளகாய், அவரை, வெண்டை, சுரைக்காய் உள்ளிட்ட காய்கறி வகைகளால் பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !