உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நத்தம் மாரியம்மன் விழா: பூப்பல்லக்குடன் நிறைவு

நத்தம் மாரியம்மன் விழா: பூப்பல்லக்குடன் நிறைவு

நத்தம்: நத்தம் மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா பூப்பல்லக்குடன் நிறைவடைந்தது. கடந்த பிப்.11 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் காலை கரந்தமலை கன்னிமார் கோயிலில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் அம்மன் கோயிலில் காப்பு கட்டி விரதம் துவங்கினர்.

இதையடுத்து தினந்தோறும் பால்குடம், மாவிளக்கு, கரும்பு தொட்டில் எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மயில், சிம்மம், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் மின் அலங்கார ரதத்தில் அம்மன் நகர்வலம் சென்றார். பிப்.24 அன்று பூக்குழி கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. மறுநாள் காலை அம்மனுக்கு மஞ்சள் பாவாடை எடுத்து வருதல், மாலையில் அரண்மனை பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பிப்.26ல் பக்தர்கள் அலகு குத்தியும், அக்னிச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பகலில் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து காப்பு கட்டிய 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். நேற்று முன்தினம் பகலில் மஞ்சள் நீராட்டு நடந்தது. அன்று இரவு பூப்பல்லக்கில் அம்மன் நகர்வலம் சென்றதுடன் விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !