சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்
ADDED :2412 days ago
சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை நாராயணப் பெருமாள் கோயில் பங்குனி திருவிழா நாளை (ஏப்., 5) காலை 9:35க்கு மேல் 10:25 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் இரவு 7:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கும். ஏப்.,11 காலை 10:31மணிக்கு மேல் 12:00 மணிக்குள் திருக்கல்யாணம், ஏப்.,15 மாலை 6:00 மணிக்கு விடையாற்றி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும். விழா ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி சுசிலாராணி மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.