உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் பங்குனி பொங்கல் விழா தேரோட்டத்தில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இக்கோயில் பொங்கல் விழா கடந்த 31 ல் துவங்கி 10 நாட்களாக நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்.7 ல் நடந்தது. அடுத்த நாள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்தி கடன் செலுத்தினர். வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருள நேற்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !