வன்னிய பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம்
புதுச்சேரி: முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தையொட்டி, கருடசேவை உற்சவம் நேற்றிரவு நடந்தது.
முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவிலில், அமைந்துள்ள அலர்மேல் மங்கை சமேத சீனிவாசப் பெருமாளுக்கு, பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறுநாள் 24ம் தேதி புருஷசுக்த ஹோமம், திருமஞ்சனம், இரவு 8:00 மணிக்கு சூரியபிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது.நேற்று முன்தினம் காலை ஹயக்ரீவ ஹோமம், திருமஞ்சனம், சஷேவாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை ஸ்ரீசுக்த, லஷ்மி ஹோமம், திருமஞ்சனம், இரவு 8:00 மணிக்கு கருடசேவை மாட வீதியுலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும் 29ம் தேதி இரவு 8:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவமும், 1ம் தேதி காலை 9:15 மணிக்கு தேரோட்டமும், மாலை 6:00 மணிக்கு கோபுர வாயிலில் தீர்த்தவாரி நடக்கிறது.