உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆர்.எஸ்.மங்கலம் சாத்தைய்யனார் கோவில் எருதுகட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம் சாத்தைய்யனார் கோவில் எருதுகட்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாத்தனூர் மஹா சாத்தைய்யனார் கோவில் சித்திரை விழா மே 1 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

அன்று முதல் தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், கோவிலில் பறை முழுக்கமும் நடைபெற்று வந்தன. ஆறாம் நாளில் வடம் எடுத்தல் விழாவும், அதைத்
தொடர்ந்து மறுநாள் தங்கு வடம் விழாவும் நடைபெற்றது.

முக்கிய விழாவான எருதுகட்டு விழா நேற்று (மே., 8ல்)நடைபெற்றது.முன்னதாக சுற்றுப்புற கிராமங்களில் இருந்து வந்திருந்த காளைகளின் கழுத்தில் விவசாயிகள் வடத்தை
வைத்து வழிபாடு செய்தனர்.

பின் விரதமிருந்த பக்தர்கள் சாத்தனூர் விநாயகர் கோவிலில் இருந்து காவடி மற்றும் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து கோவில் முன்பு தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !