உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் நூறு கோவிலுக்கு ஒரே செயல் அலுவலர்

அன்னூர் நூறு கோவிலுக்கு ஒரே செயல் அலுவலர்

அன்னூர்: அன்னூரில், 1,000 ஆண்டு பழமையான மன்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவி லில், செயல் அலுவலர் மாற்றப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதுவரை புதிய செயல் அலுவலர் நியமிக்கப்படவில்லை. மொண்டிபாளையம் செயல்அலுவலர்
சந்திரமோகன் கூடுதல் பொறுப்பாக பார்க்கிறார். அதே போல் பிரசித்தி பெற்ற குமரன்குன்று கல்யாண சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கும் செயல் அலுவலர் இல்லை. இதனால்
இக்கோவிலில், நன்கொடைதாரர்கள் மூலம் முன்புற மண்டபம் அமைக்க, அரசிடம் அனுமதி பெற பல மாதங்களானது.

அன்னூர், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்துக்கு அனுமதி பெற, ஒரு ஆண்டு ஆனது. ஒரு கால பூஜை நடத்த அரசின் நிதி உதவி பெற்ற கோவில்கள் உள்பட, 110 கோவில்களுக்கும் ஒரே செயல் அலுவலர் தான் உள்ளார். இதனால் பல கோவில்களில் திருப்பணிகள் செய்வதில் தாமதம் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !