உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் புதிய தேர் வெள்ளோட்டம்

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் புதிய தேர் வெள்ளோட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மரத்தேர் வெள்ளோட்டம் நடந்தது.கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வர்த்தக சங்கத்தினர் சார்பில் ரூ.22.5 லட்சத்தில் மரத்தேர் செய்ய திட்டமிடப்பட்டது. கடந்த ஓராண்டாக 12.5 அடி அகலம், 12.5 அடி நீளம், 31 அடி உயரத்தில் மரத்தேர் வடிவமைக்கும் பணி நடந்தது.நேற்று நான்கு ரத வீதிகளிலும் தேர் வெள்ளோட்டம் நடந்தது. தேர் கமிட்டி நிர்வாகிகள் மங்களம் அழகு, பாஸ்கரன், விஜயகுமார் மற்றும் பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக மங்கள இசை நிகழ்ச்சி, யாக பூஜைகள், பூர்ணாகுதி, சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !