திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் வைகாசி விசாக விழா
ADDED :2379 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதி, நம்புதாளை பாலசுப்பிரமணியர்கோயில்களில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. மஞ்சள், பால், பன்னீர்,பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு வகையான
அபிஷேகங்கள் நடந்தன. ஏராளமான பக்தர்கள்கலந்து கொண்டு முருகன் பக்திபாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.