திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தீர்த்தவாரி விழா
ADDED :2329 days ago
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு நேற்று முன் தினம் (மே., 18ல்) காலை 10:30 மணிக்கு தீர்த்தவாரி நடந்தது.
அதன்பின் ஆதிரெத்தினேஸ்வரர், பிரியாவிடை, சிநேகவல்லி அம்மனுடன் தெப்பகுளம் வடகரையில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள்
செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.