உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பர்கூர் அருகே பழைய கற்கால கல் கருவிகள் கண்டெடுப்பு

பர்கூர் அருகே பழைய கற்கால கல் கருவிகள் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே, பழைய கற்கால கல் கருவிகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி, வரலாற்றுத் துறை பேராசிரியர் வெங்கடேஸ் வரன் மற்றும் அவருடைய ஆய்வு மாணவர்கள் பர்கூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், பழைய கற்கால கல் கருவிகளை கண்டெடுத்தனர்.

இது குறித்து பேராசிரியர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தொல்லியல் கள ஆய்வு செய்து வருகிறோம். இதன் ஒரு
பகுதியாக பர்கூர் ஒன்றியம் பாலேப்பள்ளியின் வடக்கு புறத்தில் உள்ள, ஏர்கெட்டு என்ற மலைப்பகுதியிலும், அதை சுற்றிய நிலப்பகுதியிலும், கள ஆய்வு செய்தோம். அதில், பழைய
கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்த மேல்நிலை பழைய கற்காலம், அதாவது, 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, கல் ஆயுதங்களை சேகரித்தோம். இங்கு கைக் கோடாரிகள், வட்டக் கருவிகள், கிழிப்பான்கள், சிறிய கைக்கோடாரிகள், கோடாரிகள், சுரண்டிகள் மற்றம் முற்றுப் பெறாத, கல் ஆயுதங்கள் அதிகளவில் கிடைத்தன. இதுபோன்ற கல் ஆயுதங்கள், 60 முதல், 70 ஏக்கர் நிலப்பரப்பில் ஆங்காங்கே பரவி காணப்படுகிறது. இப்பகுதி மேல்நிலை பழைய கற்கால மனிதனின் கல் ஆயுதம் செய்யும்
இடமாக இருந்திருக்கிறது என்பதை திட்டவட்டாக கூற முடிகிறது. மேலும், இதுபோன்ற கல் ஆயுதங்கள் பர்கூர், குண்டலகுட்டா மற்றும் கப்பல்வாடி போன்ற பகுதி களிலும் காணப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !