உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர்த் திருவிழா

மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர்த் திருவிழா

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர்த் திருவிழாவில், ஏராளமானோர் வடம்பிடித்து இழுத்தனர்.மங்கலம்பேட்டை மங்களநாயகி அம்மன் கோவில் தேர்த் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

தொடர்ந்து 16ம் தேதி முதல் 28ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.நேற்று (28 ம் தேதி) தேர் திருவிழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 10:30 மணியளவில் நடந்த திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியில், ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (30 ம் தேதி) மஞ்சள் நீர் உற்சவம், நாளை (31ம் தேதி) விடையாற்றி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !