உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலர் அலங்காரத்தில் குறிஞ்சியாண்டவர்

மலர் அலங்காரத்தில் குறிஞ்சியாண்டவர்

கொடைக்கானல்: கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில்  மலர் கண்காட்சி நிறைவையடுத்து சுவாமி மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் ஆண்டுதோறும் நடக்கும் மலர்கண்காட்சி நிறைவு நேற்று முடிவடைந்தது. இதையடுத்து பழநி முருகன் உப கோயிலான குறிஞ்சியாண்டவர் கோயிலில்  சுவாமிக்கு அபிேஷக, ஆராதனை நடந்தது. பல வண்ண மலர்களை கொண்டு சுவாமி ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். விழாவினை முன்னிட்டு முன் மண்டபம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு உருவங்கள், பழநி முருகன் கோயில் தோற்றம் காட்சிப்படுத்தப்பட்டது.

ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் முருகேசன், நகராட்சி கமிஷனர் முருகேசன், நகர செயலர் ஸ்ரீதர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கொடைக்கானல் ேஹாட்டல்  கோடை  இண்டர்நேஷனல்  நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !