திருப்பரங்குன்றம் மரக்கன்றுகள் பக்தர்களுக்கு விநியோகம்
ADDED :2419 days ago
திருப்பரங்குன்றம்:உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை திருநகர் பாண்டியன்நகர் கல்யாண விநாயகர் கோயிலில் பக்தர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு குடியிருப் போர் சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து வழங்கினார். நிர்வாகிகள் பொன் மனோகரன், லிங்கராஜ், கதிர்ராஜ், குமரேசன், ஜீவா, துரைப்பாண்டியன், கணபதி, சிதம்பரம், ஹரி கலந்து கொண்டனர்.