உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

செஞ்சி: கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.

செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா 18ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 10 ம் தேதி காப்பனிவித்தல் நடந்தது. 17ம் தேதி மாலை கிருஷ்ணகிரி கோட்டை பூவாத்தம்மன், ராஜகிரி கோட்டை செல்லியம்மனுக்கு ஊரணி பொங்கலும், அன்று இரவு மாரியம்மன் . செல்லியம்மன், பூவாத்தம்மன் பூங்கரக ஊர்வலமும் நடந்தது. 18 ம் தேதி பகல் 12 மணிக்கு மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தலும், மாலை ஊரணி பொங்கலும், கும்ப படையலும் நடந்தது. இரவு மாரியம்மன், செல்லியம்மன், பூவாத்தம்மன் சாமி வீதி உலா நடந்தது. நேற்று பூங்கரக ஊர்வலமும் மஞ்சள் நீராட்டும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !