திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில்களில் ஆடி மாத விழாக்கள்
                              ADDED :2297 days ago 
                            
                          
                           திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி 10ம்  தேதி கார்த் திகை, 15ல் அமாவாசை, 18ல் ஆடிப்பூரம், 29ல் பவுர்ணமி பூஜை, 13  மற்றும் 27ல் பிரதோஷம், 31ல் 1008 விளக்கு பூஜை நடக்கிறது.
திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஆடி முதல் மற்றும் கடைசி செவ்வாய் துர்க்கை அம் மனுக்கு சிறப்பு பூஜை, கூழ் படையல், ஆடி 18ல் மீனாட்சி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம், ஆடிப்பூரம் விழாக்கள் நடக்கின்றன.
ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் ஆடி முழுவதும் காலையில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. 
எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் ஆடி 1, 2, 3, மற்றும் கடைசி வெள்ளிக் கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை, விளக்கு  பூஜை நடக்கிறது. 4ம் வெள்ளிக் கிழமை அம்மனுக்கு வளையல் அலங்காரம், கூழ்  ஊற்றும் விழா நடக்கிறது.