கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் ஆடி உற்சவம் துவக்கம்
ADDED :2567 days ago
கடலுார் கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில், 10 நாள் ஆடி மாத உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
கடலுார் பாடலீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள பராசக்தி அம்மன் சன்னதியில், ஆடி மாத பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு, 10 நாள் உற்சவம் நேற்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றத் துடன் துவங்கியது.தொடர்ந்து, சுவாமி மாட வீதியுலா நடந்தது. தினமும் காலை, மாலை சிறப்பு அபிஷேகம், வீதியுலா நடக்கிறது. 10ம் நாள் உற்சவமான வரும் ஆக., 3ம் தேதி காலை 8:00 மணி க்கு பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை முடிந்து கொலு மண்டபத்தில் திருக்கல்யாணமும், வளைகாப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.