வெள்ளகோவில் சோளீஸ்வரசுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேகம்
ADDED :2322 days ago
வெள்ளகோவில்:வெள்ளகோவில் சோளீஸ்வரசுவாமி கோவிலில் உள்ள காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அபிஷேக விழா நடந்தது.இதையொட்டி, காலபைரவருக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், திருநீறு, நெய், திருமஞ்சனம் உட்பட 32 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. அதன்பின், பைரவர், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், திரளானோர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். ஏற்பாடுகளை, காலபைரவர் கூட்டு வழிபாட்டு மன்றத்தினர் செய்திருந்தனர்.