உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் தேரோட்டம்

வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயிலில் தேரோட்டம்

 திருப்புத்துார்: என்.வைரவன்பட்டி வடிவுடையம்பாள் சமேத வளரொளிநாதர் கோயிலில் வயிரவர் சுவாமி பிரமோற்ஸவத்தை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. ஜூலை26ல் கொடியேற்றத்துடன் உற்ஸவம் துவங்கியது. தினசரி காலை வெள்ளி ரதத்தில் புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது. நேற்று காலை 8:00 மணிக்கு வயிரவர் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து பக்தர்கள் தேரில் எழுந்தருளிய வயிரவரை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. இன்று காலை 9:00 மணிக்கு மேல் தீர்த்தவாரிக்கு பின் வெள்ளி ரத புறப்பாடு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !