உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காஞ்சி கோவிலில் வளையல் சேவை விழா

திருக்காஞ்சி கோவிலில் வளையல் சேவை விழா

வில்லியனுார்: திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி சமேத கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு காமாட்சியம்மனுக்கு வளையல் சேவை விழா நடந்தது.

திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி உடனுறை கங்கைவராக நதீஸ்வரர் தேவஸ்தான ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கடந்த 24ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற விழாவில் காலை 7;00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், இரவு அலங்கரிக்கப்பட்ட காமாட்சி அம்மன் வீதியுலா நடைபெற்றது. முக்கிய விழா கடந்த 2ம் தேதி ஆடிப்பூர தேர் திருவிழா நடந்தது.10ம் நாள் விழாவான நேற்று முன்தினம் காமாட்சியம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்கள் அணியும் விழா நடந்தது. வளையல்களால் அலங்கரிக்கப்பட்ட காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று மாலை விடையாற்றி உற்சவம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி சீத்தாராமன் தலைமையில் கிராம வாசிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !