உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வனபத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

வனபத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை நடந்தது. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில், இந்த ஆண்டு ஆடிக்குண்டம் திருவிழா கடந்த மாதம், 23ம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜைகள் நடந்து வந்தன. எட்டாம் நாள் நடந்த குண்டம் இறங்கும் விழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விழா ஒன்பதாம் நாள் பெண்கள் மாவிளக்கும், பக்தர்கள் அலகு குத்தி தேர் இழுத்து வந்து வேண்டுதலை நிறைவேற்றினர். பத்தாம் நாள் இரவு நடந்த பரிவேட்டை நிகழ்ச்சியில், குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத் தொடர்ந்து வாண வேடிக்கை நடந்தது. 11ஆம் நாள் கொடியிறக்கம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இன்று காலை அம்மனுக்கு அபிஷேக அலங்கார பூஜை நடந்தது. அதை தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு, 108 திருவிளக்கு பூஜை துவங்கியது. விளக்குப் பூஜையை தனசேகர் குழுக்கள் கண்ணன், விஜய் ராமகிருஷ்ண குருக்கள் ஆகியோர் நடத்தி வைத்தனர். பரம்பரை அறங்காவலர் வசந்தா, கட்டளைதாரர்கள் கோவிந்தசாமி சன்ஸ் உரிமையாளர்கள் கனகராஜ், செல்வமணி உள்பட ஏராளமான பெண்கள் பங்கேற்று பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !