உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில்வரும் 11ம் தேதி 2000 லிட்டர் பால் அபிஷேகம்

புதுச்சேரி பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவில்வரும் 11ம் தேதி 2000 லிட்டர் பால் அபிஷேகம்

புதுச்சேரி:பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயர் கோவிலில் மண்டலாபிஷேகம் பூர்த்தி அடை வதை முன்னிட்டு, வரும் 11ம் தேதி, அனைத்து சன்னதிகளிலும் 2000 லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலையில் பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயகர் கோவிலில், அமைந்துள்ள வலம்புரி மகாகணபதி, பட்டாபிஷேக ராமச்சந்திரமூர்த்தி, ஸ்ரீவாரிவேங் கடாசலபதி மற்றும் பஞ்சமுக ஆஞ்ஜநேய சுவாமிக்கு கடந்த ஜூன் 23ம் தேதி கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது.

அதைத் தொடர்ந்து, ஜூன் 24ம் முதல் 48 நாட்களுக்கு மண்டலாபிேஷகம் நடந்து வருகிறது. வரும் 11ம் தேதி, மண்டலாபிஷேகம் பூர்த்தி அடைவதை முன்னிட்டு, வரும் 10ம் தேதி, காலை 7:00 மணி முதல் பகவத்ப்ராத்தனை, சங்கல்பம், அக்னிமதனம், நவகலச ஸ்தாபன ஹோமம், பூர்ணாஹூதி நடக்கிறது.

வரும் 11ம் தேதி காலை கோ பூஜை மற்றும் ஹோமங்களும், காலை 8:00 மணி முதல் 9:00 மணிக்குள் அனைத்து சன்னதிகளுக்கும், 2000 லிட்டர் பால் மற்றும் மங்கள திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, பூர்ணாஹூதி மற்றும் கட திருமஞ்சனம் நடக்கிறது.காலை 9:00 மணிக்கு மேல் தாமல் ராமக்கிருஷ்ணனின், ’அனுமனும் ராமனும்’ என்ற தலைப்பில் உபன்யாசம் நடக்கிறது. காலை 10:30 மணிக்கு மேல் சிறப்பு திருவாராதனம் நடைபெற்று, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

மாலை 5:00 மணிக்கு ஸ்ரீசீதாராம திருக்கல்யாணம் நடக்கிறது.பூஜைகள் அனைத்தும் பஞ்ச முக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட் மூலம் நடத்தப்படுகிறது. பூஜையில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள், பஞ்சமுக ஸ்ரீ ஜெயமாருதி சேவா டிரஸ்ட்டை அணுகலாம்.ஏற்பாடுகளை ஜெய மாருதி சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன், செயலர் நரசிம்மன், பொருளா ளர் கச்சபேஸ்வரன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !