ஆத்தூர் திருவிழி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு
ADDED :2383 days ago
ஆத்தூர்: ஆத்தூர், ராணிப்பேட்டை, சிவாஜி தெருவிலுள்ள, திருவிழி அம்மன் கோவிலில், கடந்த, 18ல், சக்தி அழைத்தலுடன், ஆவணி திருவிழா தொடங்கியது. நேற்று 22ம் தேதி, 100க்கும் மேற்பட்ட பெண்கள், பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். தொடர்ந்து, மாவிளக்கு எடுத்து, ஊர்வலமாக வந்தனர். அப்போது, திருவிழி அம்மன், புஷ்ப அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.