சித்தையன்கோட்டை காசி விசுவநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி
ADDED :2277 days ago
சித்தையன்கோட்டை : தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சித்தையன்கோட்டை காசி விசு வநாதர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.மூலவர், நந்தி, பைரவருக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. சிறப்பு மலர் அலங்காரத்துடன் அஷ்டமி பூஜை நடந்தது.
சின்னாளபட்டி-அம்பாத்துரை ரோடு ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூல வருக்கு திரவிய அபிஷேகத்துடன், வெண்ணெய் காப்பு, துளசி மாலை அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.
அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், கன்னிவாடி கதிர்நரசிங்கபெருமாள் கோயில், சோமலிங்க சுவாமி கோயிலிலும் தேய்பிறை அஷ்டமி விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.