தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :2573 days ago
பழநி : பழநி அருகே புதுஆயக்குடி வீரலட்சுமி கோயில் திருவிழாவில், பக்தர்கள்தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுஆயக்குடி வீரலட்சுமியம்மன் கோயிலில் ஆடித்திருவிழா காப்புக்கட்டுதலுடன் 15 நாட்கள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, சக்தி கரகம் வைத்து பூஜை செய்தனர். சேர்வையாட்டம், கலைநிகழ்ச்சிகளுடன் கம்பத்தில் தீபம் ஏற்றினர்.பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பூஜாரி பக்தர்களை சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயக்குடி சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். குரும்ப கவுண்டர் சமுதாயத்தினர் ஏற்பாடுகளை செய்தனர்.