உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஊட்டி தேவாலயங்கள் சீரமைப்புக்கு நிதி பெற விண்ணப்பிக்கலாம்

ஊட்டி தேவாலயங்கள் சீரமைப்புக்கு நிதி பெற விண்ணப்பிக்கலாம்

ஊட்டி:’கிறிஸ்தவ தேவாலயம் சீரமைத்தல் பணிக்கு நிதி தேவைப்படுவோர்  விண்ணப்பிக்க வேண்டும்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் இன்னசென்ட்  திவ்யா அறிக்கை:தமிழகத்தில் சொந்த கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ  தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமை த்தில் பணிகள்  மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இப்பணிக்காக அரசு, 1 கோடி ரூபாயை, சிறுபான்மையினர் நலத்துறைக்கு  ஒதுக்கியுள்ளது. தகுதியின் அடிப்படையில் நிதி உதவி வழங்கப்பட உள்ளது.  இதற்காக,தேவாலாயங்களிலிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பபடிவம் மற்றும் சான்றிதழை www.bcmbcmw@tn.gov.inஎன்ற இணைய தள முகவரி யில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !