உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை ஆவணித் திருவிழா: செப்.8ல் முருகன் புறப்பாடு

மதுரை ஆவணித் திருவிழா: செப்.8ல் முருகன் புறப்பாடு

திருப்பரங்குன்றம், மதுரையில் நடக்கும் ஆவணி மூலத் திருவிழாவில் பாண்டியராஜாவாக பங்கேற்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் திருப்பரங்குன்றத்தில் இருந்து செப்., 8ல் புறப்பாடாகிறார்.

இதையொட்டி சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு காப்பு கட்டப்பட்டு சர்வ அலங்காரத்தில் தங்கப்பல்லக்கில் புறப்பட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சென்றடைவார். அங்கு மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், பிரியாவிடை சந்திப்பு, வரவேற்பு நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு நரியை பரியாக்கும் லீலையில் மதுரை சுவாமிகளுடன் பங்கேற்கிறார். புட்டுக்கு மண் சுமந்த லீலை, விறகு விற்ற லீலையிலும் சுப்பிரமணிய சுவாமி பங்கேற்கிறார். செப்., 13ல் பூப்பல்லக்கில் திருப்பரங்குன்றம் திரும்புகிறார். இந்நாட்களில் கோயில் நடைதிறப்பு, பூஜைகள் வழக்கம்போல் நடக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !