உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பள்ளிபாளையத்தில் அருகே முதுமக்கள் தாழி

பள்ளிபாளையத்தில் அருகே முதுமக்கள் தாழி

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் அருகே முதுமக்கள் தாழி  கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கொக்கராயன்பேட்டை பாரதிநகரில்  நேற்று முன்தினம் (செப்., 26ல்) மதியம் மின்கம்பம் நடுவதற்கு மின்வாரிய ஊழியர்கள் குழி தோண்டினர். அதில் பானை ஒன்று தென்பட்டது. தொடர்ந்து குழி தோண்டிய போது அது முதுமக்கள் தாழி என தெரிந்தது. உள்ளே எலும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவலறிந்த வருவாய்த் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தாழியில் உள்ள எலும்புகளை சேகரித்தனர்.

இதுகுறித்து அப்பகுதியில் கூறுகையில் ‘ஆற்றோரத்தில் கொக்கராயன்பேட்டை  அமைந் துள்ளது. எனவே தொல்பொருள் துறையினர் ஆய்வு செய்தால் மேலும் பல  வரலாற்று சின்னங்களை கண்டுபிடிக்கலாம்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !