நகரி காளஹஸ்தி கோவில் உண்டியலில் ரூ.92.58 லட்சம்
ADDED :2235 days ago
நகரி: காளஹஸ்தி கோவில் உண்டியலில், 25 நாட்களில், 92.58 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணி க்கையாக செலுத்தி உள்ளனர்.சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில், வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசிக்கின்றனர்.
பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. அதன் மூலம், 25 நாட்களில், 92 லட்சத்து, 58 ஆயிரத்து, 75 ரூபாய் ரொக்கம், 383 கிலோ வெள்ளி, 81 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன.மேற்கண்ட தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி சந்திரசேகர ரெட்டி தெரிவித்தார்.