உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை ஆனந்த சாயிபாபா 101வதுசமாதி ஆண்டு விழா

உடுமலை ஆனந்த சாயிபாபா 101வதுசமாதி ஆண்டு விழா

உடுமலை:உடுமலை, தில்லை நகர், ஆனந்த சாயி கோவிலில், சீரடி சாயிபாபா  101 சமாதி ஆண்டு விழா, அக்., 8ம் தேதி நடக்கிறது.

மகாசமாதி தினவிழாவையொட்டி, அன்று, காலை, 6:30 மணி முதல், சிறப்பு ஹோமம், அபிஷேக அலங்கார தீபாராதனை கூட்டு பிரார்த்தனை, மகாதீபாராதனையும் நடக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு அறக்கட்டளை மூலம் நோட்டு, புத்தகங்கள்,  வழங்கப்படுகிறது. நவராத்திரி விழாவையொட்டி, செப்., 29ம் தேதி முதல் அக்., 8ம்  தேதி வரை கொலு வழிபாடும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !