உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்துார் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

முதுகுளத்துார் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா

முதுகுளத்துார்:முதுகுளத்துார் அருகே ஆனைச்சேரி கிராமத்தில் அய்யனார்  கோயில் புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும். தொழிளாளர்களுக்கு வேலை  வாய்ப்பு கிடைக்க வேண்டும்.இதற்காக கடந்த மாதம் மண்குதிரை செய்ய பெருங்கரணை கிராமத்தில் பிடிமண் வழங்கப்பட்டது. புரவி எடுப்பு திருவிழாவை  முன்னிட்டுபத்துநாட்களுக்கு முன்பு காப்புக் கட்டுதலுடன் விழா துவங்கியது.  கிராமத்தில் தினமும் இளைஞர்கள் ஒயிலாட்டம், பெண்கள் கும்மியடித்தும்  வந்தனர்.பெருங்கரணை கிராமத்தில் தயார் செய்யப்பட்ட குதிரை, தவழும்  பிள்ளை உருவத்தை ஊர்வலமாக கிராமமக்கள் எடுத்து வந்தனர்.

பின்பு அய்யனார் கோயிலில் வைத்து குதிரை, தவழும் பிள்ளைகளுக்கு சிறப்பு  அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது. கிராம மக்கள் கோயிலில் பொங்கல்  வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம்  நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !