உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவி வடபத்ரசயனர் கோயிலில் செப்பு தேரோட்டம்

ஸ்ரீவி வடபத்ரசயனர் கோயிலில் செப்பு தேரோட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்ஸவ ஒன்பதாம் நாள் செப்புதேரோட்டம் நடந்தது. இதை முன்னிட்டு காலை 6:36 மணிக்கு பெரிய பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூமா தேவி செப்புதேருக்கு எழுந்தருளினர். அங்கு ஹரீஸ்பட்டர் சிறப்பு பூஜைகள் செய்த பின்னர் காலை 7:05 மணிக்கு கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், சுதர்சன் பட்டர், மாதவன், மணியம் ஸ்ரீராம், ஸ்தானிகம் கிருஷ்ணன் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர்.
 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !