உள்ளூர் செய்திகள்

இரக்கம் வேண்டும்

அடர்ந்த காடு அது. அங்கு வழிப்போக்கன் ஒருவனை துன்புறுத்தி பணம், பொருட்களை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அந்த வழியாக வந்த போதகர் ஒருவரும், பணக்காரர் ஒருவரும் சுயநலத்துடன் விலகிச் சென்றனரே தவிர வழிப்போக்கரை கண்டு கொள்ளவில்லை. ஆனால் கழுதையுடன் வந்த ஏழை ஒருவர், உயிருக்கு போராடிய வழிபோக்கரைக் கண்டதும் இரக்கப்பட்டார். அவரை கழுதை மீது ஏற்றிக் கொண்டு தர்ம சத்திரத்தில் தங்க வைத்தார். மற்றவரின் துன்பம் கண்டு இரக்கப்படாதவர்கள் நீதிமான்கள் அல்ல. பிறருக்கு உதவி செய்வதில் இந்த ஏழையைப் போல இருங்கள் என தன் சீடர்களுக்கு அறிவுறுத்தினார் ஆண்டவர்.